கிளிநொச்சி பரந்தன் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பரந்தன் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள உமையாள்புரம் செல்லும் வீதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில் சென்றநபரொருவர் கடந்து செல்ல முற்பட்ட வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி கண்ணகியம்மன் கோவிலடி மலையாளபுரத்தைச் சேர்ந்த 36 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து நாகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
No comments:
Post a Comment