பாடசாலை மாணவர்களுக்கு 'தூயசக்தி தொழில்நுட்பம்' தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு - News View

About Us

About Us

Breaking

Monday, March 5, 2018

பாடசாலை மாணவர்களுக்கு 'தூயசக்தி தொழில்நுட்பம்' தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

'தூயசக்தி தொழில்நுட்பம்' தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று பாடசாலை மாணவர்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரவிராஜன் இதற்கான ஓழுங்குகளை மேற்கொண்டுள்ளார். 

யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம், வட மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் யாழ் - மேற்கு நோர்வேப் பல்கலைக் கழகங்கள் (Western Norway University of Applied Sciences) இதற்கு அணுசரனை வழங்குகின்றன.

இதன் கீழ் தெரிவு செய்யப்பட்ட 6 பாடசாலைகளில் 10 செயலமர்வுகளாக நடைபெறும். இதன் முதற்கட்டம் எதிர்வரும் மார்ச் 6ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரையில் யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

1ஏபீ பாடசாலைகளைச் சேர்ந்த தரம் 8 தொடக்கம் தரம் 11 வரையிலான மாணவர்கள் பங்கேற்பர். க.பொ.த உயர் தரத்தில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையினை கற்கும் மாணவர்களும் இதில் கலந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செயமர்வின் மூலம் சுமார் 3500 மாணவர்கள் பயன்பெறவுள்ளனர்.

No comments:

Post a Comment