கோரிக்கைகளுக்கு தீர்வு கிட்டியதால் வைத்தியர்கள் போராட்டம் நிறைவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 30, 2018

கோரிக்கைகளுக்கு தீர்வு கிட்டியதால் வைத்தியர்கள் போராட்டம் நிறைவு

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து சாதகமான தீர்வு கிட்டியுள்ளதால், பணி புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளதாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் 10 கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (30) காலை முதல், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

இதனையடுத்து சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, குறித்த போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment