அரச ஊழியர்களுக்கு பொது நிர்வாகச் சுற்றறிக்கை 03-2016 மூலமாக நான்கு கட்டங்களாகப் பிரித்து வழங்கப்பட்டு வரும் சம்பளத்தின் மூன்றாம் கட்ட அதிகரிப்பினை 2018 ஜனவரி முதலாம் திகதி அமுலாகும் வகையில் ஜனவரி மாத சம்பளத்துடன் அரச ஊழியர்கள் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
2016 தொடக்கம் 2019 வரை நான்கு கட்டங்களாகப் பிரித்து வழங்கப்பட்டு வரும் இச்சம்பளத்தின் முழுமையான அதிகரிப்பு 2020 ஜனவரி தொடக்கம் அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ளது.
இவ்வாறு அதிகரிக்கப்படும் சம்பளத்தின் அடிப்படையில் மேலும் பல நன்மைகளை அரச ஊழியர்கள் பெற்று வருகின்றனர். குறிப்பாக மேலதிக நேரப்படி, இடர் கடன், சொத்துக் கடன் போன்றவற்றுடன் ஓய்வில் செல்லும் போது வழங்கப்படும் ஓய்வூதியப் பணிக்கொடை ஓய்வூதியம் போன்றவற்றிலும் அவர்கள் அதிகரித்த தொகையினைப் பெறக்கூடிய வகையில் இந்த சம்பள அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment