இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்று கொள்ளுவதற்காக தனிப் பிரிவொன்றை அமைத்துள்ளது. தேர்தலுடன் தொடர்புபட்ட உரிமைகள் மீறப்படுதல் உள்ளிட்டவற்றை கண்டறிவதே இதன் நோக்கமாகும்.
விசேடமாக பெண் வேட்பாளர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முறைப்பாடுகளை ஏற்றுகொள்ளும் இந்தப் தனிப்பிரிவு 24 மணி நேரமும் செயற்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
077 3088135 அல்லது 077 3762112 என்ற தொலைபேசி இலக்கங்களுடாக தொடர்புகொண்டு முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என்று இலங்கை மனிதயுரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment