2 இலட்சம் மக்களுக்கான வாழ்விடமாக புதிய நவீன கொழும்பு துறைமுக நகரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 2, 2018

2 இலட்சம் மக்களுக்கான வாழ்விடமாக புதிய நவீன கொழும்பு துறைமுக நகரம்

இரண்டு இலட்சம் மக்கள் வாழ்­வ­தற்கு ஏற்­ற­வ­கையில் மிகவும் அழ­கான நவீன முறையில் நகரம் ஒன்றை நிர்­மா­ணித்து சிங்­கப்பூர் போன்ற நாடு­களில் இருக்கும் வச­தி­களை பெற்­றுக்­கொ­டுப்போம் என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

கொழும்பு துறை­முக நக­ரத்­திட்ட வேலைத்­திட்­டங்­களை நேற்று பார்வை­யி­டச்­சென்ற பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, வேலைத்திட்டத்தின் முன்­னேற்றம் தொடர்­பாக அதி­கா­ரி­க­ளிடம் கேட்­ட­றிந்து கொண்­டதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரிவிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

சீனா துறை­முக நிறு­வ­னத்­தினால் கடல் நிலத்தை நிரப்பி 99 வருடங்களில் இந்த இடத்தில் நகரம் ஒன்றை ஏற்­ப­டுத்­துவோம். இந்த நகரம் பயன்­ப­டும் ­வ­கையில் முழு இந்­து சமுத்­தி­ரத்­துக்கும் பொருத்த­மான நிதி வர்த்­தக மத்­திய நிலையம் ஒன்றை நிர்மாணிப்ப­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம். அதற்­காக துறை­முக நகரமா­கிய இந்த பிர­தே­சத்தில் பிரத்­தி­யே­க­மாக நிதி மாவட்டம் ஒன்றை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். 

அத்­துடன் இந்த வேலைத்­திட்­டத்தின் கீழ் இந்த பிர­தே­சத்தில் இரண்டு இலட்சம் மக்கள் வாழ்­வ­தற்கு ஏற்­ற­ வ­கையில் மிகவும் அழகான நவீன முறையில் நகரம் ஒன்றை நிர்­மா­ணிப்போம். சிங்கப்பூர் போன்ற நாடு­களில் இருக்கும் வச­திகள் அனைத்தும் இந்த நக­ரத்­துக்கு பெற்­றுக்­கொ­டுப்போம். இது சீன துறை­முக நிறுவனத்தின் பிர­தான முத­லீ­டாகும்.

அத்­துடன் இந்த வேலைத்­திட்­டம் நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்கு புதிய­தொரு சக்­தியை ஏற்­ப­டுத்தும் வேலைத்­திட்­ட­மா­கவே பார்க்கின்றோம். அத்­துடன் இந்த இடத்தில் இருந்­து­கொண்டே எமது மக்­க­ளுக்கு வெளி­நாட்டு முத­லீ­டுகள் மற்றும் நிதி­ வ­ச­தி­களை பெற்றுக்­கொள்ள தேவை­யான சட்ட மற்றும் வணிக சேவை­களை பெற்­றுக்­கொ­டுப்போம். இதற்கு அப்பால் இந்த பிர­தே­சத்தில் எமது மக்கள் பெரு­மைப்­படும் வகையில் மகிழ்ச்­சி­யாக இருக்க பாரிய பூங்­கா­வொன்றை ஏற்­ப­டுத்த இருக்­கின்றோம்.

அத்­துடன் 2020ஆகும் போது இந்த துறை­முக நக­ரத்தின் அடிப்­படை வேலைத்­திட்­டங்கள் மற்றும் ஏனைய கட்­டட வேலை­களை பூர்த்திசெய்ய இருக்­கின்றோம். இதன் மூலம் நாங்கள் நினைத்தும் பார்க்க முடி­யாத நகரம் ஒன்று இங்கு அமை­யப்­போகின்­றது. இது இந்­து சமுத்­தி­ரத்தின் கேந்­திர நிலை­யத்­துக்­கான வேலைத்திட்டங்களில் ஒரு பகு­தி­யாகும். துறை­முகம், விமான நிலையம் ஆகி­ய­வற்றின் சேவை­யுடன் உற்­பத்தி தொழிற்சாலைகளை ஏற்­ப­டுத்­து­வது, நிதி சேவை­களை ஏற்படுத்துவது மற்றும் சுற்­றுலா வேலைத்­திட்­டங்­களை ஏற்­ப­டுத்தும் திட்­டத்­திலே அர­சாங்கம் என்­ற ­வ­கையில் இந்த வேலைத்திட்டங்களை மேற்­கொண்டு செல்­கின்றோம். 

அத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் இந்த வேலைத்­திட்­டங்­களை நாங்கள் பொறுப்­பேற்­றுள்ளோம். இதற்கு தேவை­யான சட்­டங்­களை இந்த வருடம் முன்­வைப்­ப­தற்கு எதிர்­பார்க்­கின்றோம். அத்­துடன் அனைத்­தையும் ஒரே­ த­ட­வையில் செய்­து­மு­டிக்க இய­லாது. தற்­போது நாங்கள் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். இலங்கை கடனுக்குள் மூழ்கியிருந்ததற்கு பதிலாக இலங்கையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தி, சிறந்த முறையில் வாழ்வதற்கு முடியுமான, தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் பொருளாதாரத்தை ஏற்படுத்த நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment