பழுதடைந்த அல்லது பழுதாக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்காக இன்று வரை, அதாவது டிசம்பர் 31ஆம் திகதி வரை மத்திய வங்கி கால அவகாசம் வழங்கியிருந்தது. எனினும் வழங்கப்பட்டிருந்த கால எல்லையை எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நாணயத்தாள்களை 2017 டிசம்பர் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுமதி பெற்ற வங்கிகளில் மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி ஏற்கனவே மக்களுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment