இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளை முதல் நிவாரணம்! - News View

About Us

About Us

Breaking

Sunday, December 3, 2017

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளை முதல் நிவாரணம்!

நாட்டில் ஏற்பட்ட சூறா­வளி மற்றும் அதிக மழையால் வீடு மற்றும் சொத்­து­க­ளுக்கு பாதிப்பு ஏற்­பட்­ட­வர்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்கும் நட­வ­டிக்­கைகள் நாளை ஆரம்­பிக்­கப்­படும். இயற்கை அனர்த்தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பிர­தமர் ரணில் விக்கிரம­சிங்க விடுத்த பணிப்­பு­ரை­யின்­படி இந்நஷ்­ட­ஈடு வழங்கப்ப­டு­கி­றது.

இலங்­கையின் தென் கடற்­கரைப் பிர­தே­சத்­திலும் மேல் மற்றும் ஊவா மாகா­ணங்­களில் ஏற்­பட்ட சூறா­வளி மற்றும் கடும்­மழை  காரண­மாக பாதிக்­கப்­பட்ட வீடுகள், சொத்­துகள் தொடர்­பாக பிரதேச செய­லா­ளர்­களால் தயா­ரிக்­கப்­பட்ட மதிப்­பீட்டு அறிக்கை தற்­போது பிர­தமர் அலு­வ­ல­கத்­துக்கும், உள்­நாட்­ட­லு­வல்கள் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்­ச­ருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இயற்கை அனர்த்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்குத் தேவை­யான நிதியை கடந்த 30ஆம் திகதி மாவட்ட செய­லா­ளர்­க­ளுக்கு அனுப்­பி­ வைக்­கும்­படி பிர­தமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய ஆலோசனையை அடுத்து நிதி அமைச்சு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

No comments:

Post a Comment