க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்சை நடைபெறுவதில் மாற்றமில்லை. - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 5, 2017

க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்சை நடைபெறுவதில் மாற்றமில்லை.

சீரற்ற கால­நிலை கார­ண­மாக இவ்வருடம் இடம்­பெ­ற­வுள்ள க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்­சையில் எந்த வித மாற்­றங்­களும் இடம்­பெ­றாது என பதில் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் டி. சனத்பூஜித தெரி­வித்­துள்ளார். க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்சையை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீரற்ற கால­நி­லையால் இவற்­றிற்கு எவ்வித தடையும் ஏற்­ப­ட­வில்லை. எனவே க.பொ.த சாதா­ரண தரப் பரீட்சை குறிப்­பிட்ட காலத்தில் நடை­பெறும் என அவர் மேலும் தெரிவித்­துள்ளார். 

மேலும், அவர் இது தொடர்பில் தெரி­விக்­கையில்...

பரீட்­சாத்­திகள் அனை­வ­ருக்­கு­மான பரீட்சை அனு­மதி பத்­தி­ரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. சீரற்ற கால­நிலை வெள்ள அனர்த்தம் போன்­ற­வற்றால் பரீட்சை அனு­மதி பத்­தி­ரங்கள் சேத­மடைந்திருந்தால் மீண்டும் புதிய அனு­மதி அட்­டைகள் வழங்கப்­படும். 

இதே வேளை இன்று (05) நள்­ளி­ரவு முதல் கா.பொ.த. சாதா­ரண தரத்திற்­காக நடாத்­தப்­படும் தனியார் வகுப்­புக்கள் அனைத்தும் தடை செய்­யப்­படும் எனவும் தெரி­வித்தார். இவ்­வ­ருடம் நாட­ளா­விய ரீதியில் 688,573 பரீட்­சாத்­திகள் பரீட்­சைக்கு தோற்றவுள்ளதோடு 5116 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment