பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசமயமாக்கும் ஆய்வு தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு - News View

About Us

About Us

Breaking

Saturday, December 30, 2017

பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசமயமாக்கும் ஆய்வு தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு

மலையக அபிவிருத்தி ஸ்தாபனத்தின் ஊடாக பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசமயமாக்கும் ஆய்வு தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு ஒன்று கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் நேற்று காலை இடம்பெற்றது.

மலையக அபிவிருத்தி ஸ்தாபனத்தின் தலைவர் பி.பி.சிவப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்ற இந்த தெளிவூட்டும் நிகழ்வில் கல்விமான்கள், சட்டதரணிகள், சமூக ஆய்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நகரங்களை போன்று தோட்டப்பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களும் செயல்பட வேண்டும். பாரிய சுகாதார குறைபாடுகளுக்கு பெருந்தோட்ட பகுதி மக்கள் நீண்ட காலமாக முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒவ்வொரு தோட்டப்பகுதிகளிலும் உள்ள தோட்ட வைத்தியசாலைகளை அரசமயமாக்கி இதனூடாக சுகாதார சீர்கேட்டு பிரச்சினைகளை நிவர்த்திக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் ஆய்வு ஒன்று மலையக அபிவிருத்தி ஸ்தாபனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment