மஹிந்த ஆட்­சியை கவிழ்க்­கவே ரணில் - மைத்­திரி கூட்­ட­ணி­ : திஸ்ஸ அத்தநாயக்க. - News View

About Us

About Us

Breaking

Friday, December 1, 2017

மஹிந்த ஆட்­சியை கவிழ்க்­கவே ரணில் - மைத்­திரி கூட்­ட­ணி­ : திஸ்ஸ அத்தநாயக்க.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும், ஐக்­கிய தேசியக் கட்­சியும் இணைந்தமை­யா­னது நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அல்ல. மாறாக மஹிந்த ஆட்­சியை கவிழ்ப்­ப­தற்­காக மாத்­தி­ரமேயாகும். இவ்­விரு கட்­சி­க­ளும் அமைச்­சுக்களை பகிர்ந்து கொண்டாலும் இருவேறு கொள்­கைகளை கொண்டே அர­சி­யலை நடத்தி வருகின்றன என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திஸ்ஸ அத்தநா­யக்க தெரி­வித்­தார். 

மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய மஹா­சங்­கத்­தி­னரை நேற்று (01) சந்தித்த பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்...

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­ப­க்ஷ்­வி­ன் ஆட்­சியை கவிழ்ப்பதற்­கா­கவேயன்றி வேறு எந்த கார­ணத்­திற்­கா­கவும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும், ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஒன்றிணையவில்லை. முன்னைய ஆட்சியைக் கவிழ்ப்­ப­தற்­கா­கவே ஒன்­றி­ணைந்­த­னர். நாட்டை முன்­னேற்­றப்­பா­தையில் இட்டுச்செல்வ­தற்­காக அல்ல. ஆனால் இவ்­விரு கட்­சி­களும் ஒரு நோக்­கத்தின் கீழ் செயற்­ப­ட­வில்லை. அதனால் தற்­போது ஆட்­சியில் விரிசல் ஏற்­பட்­டுள்­ளது.

மேலும் ஐக்­கிய தேசிய கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் மேல்மட்­டத்தில் ஒன்­றி­ணைந்து காணப்­பட்­டாலும் கீழ் மட்டத்தில் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வில்லை என்­பது தெளிவா­கி­றது. காரணம் ஒரே நோக்­கத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படவில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம் என அவர்கள் தெரிவித்தாலும் அவர்களின் செயற்பாடு வேறொன்றாகவே காணப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment