ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்தமையானது நாட்டை கட்டியெழுப்புவதற்கு அல்ல. மாறாக மஹிந்த ஆட்சியை கவிழ்ப்பதற்காக மாத்திரமேயாகும். இவ்விரு கட்சிகளும் அமைச்சுக்களை பகிர்ந்து கொண்டாலும் இருவேறு கொள்கைகளை கொண்டே அரசியலை நடத்தி வருகின்றன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய மஹாசங்கத்தினரை நேற்று (01) சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் ஆட்சியை கவிழ்ப்பதற்காகவேயன்றி வேறு எந்த காரணத்திற்காகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணையவில்லை. முன்னைய ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகவே ஒன்றிணைந்தனர். நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்வதற்காக அல்ல. ஆனால் இவ்விரு கட்சிகளும் ஒரு நோக்கத்தின் கீழ் செயற்படவில்லை. அதனால் தற்போது ஆட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மேல்மட்டத்தில் ஒன்றிணைந்து காணப்பட்டாலும் கீழ் மட்டத்தில் ஒன்றிணைந்து செயற்படவில்லை என்பது தெளிவாகிறது. காரணம் ஒரே நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படவில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம் என அவர்கள் தெரிவித்தாலும் அவர்களின் செயற்பாடு வேறொன்றாகவே காணப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment