மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு கல்விக்கோட்டத்திலுள்ள மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு எமது பாடசாலையில் க.பொ.த. உயர்தரம் வெறும் 11 மாணவர்களுடன் விஞ்ஞான பிரிவு பல்வேறு சவால்களையும் தாண்டி ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிரகாரம் 2015 உ/த பரீட்சைக்கு மாணவர்களில் 9 பேர் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கான தகமையை பெற்றுக் கொண்டனர்.
2016 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் பொறியியல் பீடத்திற்கு ஒரு மாணவன் தெரிவு செய்யப்பட்டமை இப்பாடசாலையின் ஒரு மைல் ஆகும்.
இவ்வருடம் (2017) க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் MF. Rilfana எனும் மாணவி மாவட்ட மட்டத்தில் 6 ஆம் இடம் பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். கல்குடா வரலாற்றில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் Merit அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகுவது இதுவே முதன்முறையாகும்.
அல்ஹம்துலில்லாஹ்
MB.MOHAMED SILMY
MEDICAL STUDENT,
EASTERN UNIVERSITY.
No comments:
Post a Comment