இள­வ­ரசர் ஹரி, மெகான் திரு­மணம் 7 வரு­டங்­க­ளுக்கு மேல் நீடிக்­காது. - News View

About Us

About Us

Breaking

Monday, December 4, 2017

இள­வ­ரசர் ஹரி, மெகான் திரு­மணம் 7 வரு­டங்­க­ளுக்கு மேல் நீடிக்­காது.

பிரித்­தா­னிய இள­வ­ரசர் ஹரி­யி­னதும் அவ­ரது காதலி மெகான் மெர்கி­ளி­னதும் திரு­மணம் 7 வரு­டங்­க­ளுக்கு மேல் நீடிக்­காது எனத் தெரி­வித்து பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள லண்டன் தேவாலய ஆயர் ஒருவர் திரு­ம­ணத்தில் இணையப் போகும் அவர்களுக்கு வாழ்த்­து­க்களைத் தெரி­விக்க மறுத்­துள்ளார்.

லண்டன் தேவா­ல­யத்தின் பிரதி ஆய­ரான பீற் புரோட்­பென்ட்­டிடம்  (65 வயது) நீங்கள் எதிர்­வரும் ஆண்டு திரு­மண பந்­தத்தில் இணையவுள்ள ஹரி மற்றும் மெகா­னுக்கு அவர்­க­ளது மகிழ்ச்சிகரமான வாழ்­வுக்கு வாழ்த்­துக்­களைத் தெரி­விக்க விரும்புகி­றீர்­களா என வின­வப்­பட்ட போது, தான் இது தொடர்பில் எவ்­வித விமர்­ச­னத்­தையும் செய்­வ­தற்கு தற்­போது விரும்­ப­வில்லை என அவர் தெரி­வித்­துள்ளார்.

ஆனால் பிரித்­தா­னிய கன்­டர்­பரி பேரா­ய­ரான ஜஸ்டின் வெல்பி மற்றும் அமெ­ரிக்க நியூயோர்க் நகர பேராயர் ஜோன் சென்­தமு ஆகிய சிரேஷ்ட மத­கு­ருமார் இள­வ­ரசர் ஹரி மற்றும் மெகான் திருமண பந்­தத்தில் இணை­வது குறித்து மகிழ்ச்­சியை வெளிப்படுத்தி­யுள்­ளனர்.

2011ஆம் ஆண்டில் இள­வ­ரசர் ஹரியின் சகோ­த­ர­ரான இள­வ­ரசர் வில்லி­யத்தின் திரு­மணம் இடம்­பெற்றபோது அந்­நி­கழ்வில் கலந்து கொள்­வ­தற்கு ஆய­ரான பீற் புரோட்­பென்ட்­டுக்கு  அனுமதியளிக்கப்ப­ட­வில்லை.

அவர் இள­வ­ரசர் வில்­லி­யத்­தையும் அவ­ரது துணை­வி­யான கத்தரீனையும் வெறுக்­கத்தக்க பிர­ப­லங்கள் எனவும் நல்லெண்ணமின்றி காதல் கொண்டவர்கள் எனவும் குறிப்பிட்டதையடுத்தே அவருக்கு அந்தத்திருமணத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment