இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 69 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 69 இந்திய மீனவர்களையும் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க இன்று இலங்கை கடற்படையும் கரையோர பாதுகாப்பு பிரிவும் நடவடிக்கை மேற்கொண்டன.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக இந்த மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கை கடற்படை இந்த மீனவர்களை காங்கேசன்துறை வடக்கு பகுதியில் அமைந்துள்ள சர்வதேச கடல் பகுதியில் வைத்து இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவிடம் கையளித்தது.
No comments:
Post a Comment