முப்பது பேருடன் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று கனரக வாகனத்துடன் மோதி ஆற்றினுள் விழுந்ததில் ஏழு பேர் பலியான சம்பவம் நேபாளத்தின் தாதிங் என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஏனைய பயணிகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலை ஒன்பது மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தையடுத்து, ஆற்றினுள் விழுந்த பேருந்து சுமார் 25 அடி ஆழம் வரை சென்றுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும் மீட்புப் பணியினரும் விரைந்து செயற்பட்டு பயணிகளைக் காப்பாற்றியுள்ளனர்.
தவறான பாதையில் வந்த பேருந்து கனரக வாகனத்துக்கு இடம் கொடுக்க முடியாமல் நேருக்கு நேர் மோதியதாகவும் இதனால் நிலை தடுமாறிய பேருந்து அருகில் இருந்த ஆற்றினுள் விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment