அனர்த்தம் தொடர்பில் தகவல் வழங்க திடீர் அனர்த்த தொலைபேசி இலக்கம். - News View

About Us

About Us

Breaking

Thursday, November 30, 2017

அனர்த்தம் தொடர்பில் தகவல் வழங்க திடீர் அனர்த்த தொலைபேசி இலக்கம்.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு ஏற்பட்டால் அது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் திடீர் அனர்த்த தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமக்கு பாதிப்பு ஏதும் ஏற்பட்டால் உரிய கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்குமாறும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் திடீர் அனர்த்த தொலைபேசி இலக்கமான 1902 என்ற இலக்கத்திற்கு தொலைபேசி ஊடாக அனர்த்தம் தொடர்பில் அறிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்...

நிவாரண சேவைகள் உடனடியாக வழங்கப்படும். இழப்பீடும் உடனடியாக வழங்கவும் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

நாடு முழுவதிலும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இவர்களுக்கு துரிதமாக நிவாரண சேவையை வழங்குமாறும் பாதுகாப்பு இடங்களில் தங்க வைக்குமாறும் உள்நாட்டலுவல்கல் அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிதுள்ளது. 

பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்கள் சேதங்கள் தொடர்பான தகவல்களை தமது பிரதேச கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்குமாறும் இத்தகவல்களுக்கு அமைவாக துரிதமாக இழப்பீடு வழங்கப்படும் என்றும் உள்நாட்டலுவல்கல் அமைச்சர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment