சவுக்கடி இரட்டைக் கொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

Add+Banner

Thursday, November 30, 2017

demo-image

சவுக்கடி இரட்டைக் கொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

DSC_0005
மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூர் சவுக்கடி தாய், மகன் இரட்டைக் கொலைச் சம்பவம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் விளக்கமறியல் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் புதன்கிழமை 29.11.2017ஆந்திகதி ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது சந்தேக நபர்களை டிசம்பர் 13ஆந்திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சவுக்கடி பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் 27 வயதுடைய மதுவந்தி பீதாம்பரம் மற்றும் அவரது மகன் 11 வயதுடைய மதுர்சன் ஆகியோர் கடந்த மாதம் 17ஆந்திகதி நள்ளிரவு தீபாவளி தினத்திற்கு முந்திய நாள் கொள்ளையர்களினால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஐவர் கைது செய்யப்பட்டு மூவர் குற்றமற்றவர்கள் என நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டதுடன் பிரதான சூத்திரதாரிகள் என சந்தேகிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கந்தசாமி புஸ்பராசா மற்றும் சவுக்கடிப் கிராமத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி சகாயராசா சில்வஸ்டர் ஆகியோர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

சம்பவ இடத்தில் கொள்ளையிட்டு யாழ்ப்பாணத்தில் அடகு வைக்கப்பட்ட 16 பவுண் தங்க நகைகளையும் பொலிஸ் புலனாய்வுப்பிரிவினர் மீட்டிருந்தனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *