கிண்ணியா பாலத்திற்கருகில் 90 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல். - News View

About Us

About Us

Breaking

Thursday, November 30, 2017

கிண்ணியா பாலத்திற்கருகில் 90 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்.

கிண்ணியா பாலத்திற்கருகில் 90 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை டிசம்பர் மாதம் 14ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று 30.11.2017ஆம்திகதி திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா உத்தரவிட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பெரிய கிண்ணியாவைச் சேர்ந்த 37 வயதுடைய அப்துல்காதர் அமானுல்லாஹ் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா பாலத்திற்கருகில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.எம்.பீ.பீ. விஜயசிறி தலைமையில் பொலிஸார் சோதனையிட்டபோது 90 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது.

அப்துல்சலாம் யாசீம்

No comments:

Post a Comment