கொவிட் ஜனாஸாக்களை அடக்க மாவட்ட ரீதியாக மையவாடி அமைக்க வேண்டும் - அலி சாஹிர் மௌலானா - News View

About Us

About Us

Breaking

Sunday, July 18, 2021

கொவிட் ஜனாஸாக்களை அடக்க மாவட்ட ரீதியாக மையவாடி அமைக்க வேண்டும் - அலி சாஹிர் மௌலானா

கொவிட் 19 தொற்­றினால் மர­ணிக்கும் ஜனா­ஸாக்­களை ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டிக்கு அடக்­கத்­துக்­காக எடுத்துச் செல்­வதில் மக்கள் பல சிர­மங்­களை எதிர்­நோக்­கு­கின்­றனர். வச­தி­யற்ற மக்கள் பெரிதும் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். அதனால் மாவட்­டங்கள் தோறும் கொவிட் 19 ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்கு மைய­வாடி ஒதுக்கப்­ப­ட­ வேண்டும் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சாஹிர் மெள­லானா கோரிக்கை விடுத்­துள்ளார்.

மாவட்ட ரீதியில் மைய­வாடி ஒதுக்­கப்­பட வேண்­டி­யதன் அவசியத்தை சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளிடம் தான் தெளிவுபடுத்தியுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். 

இது தொடர்பில் அவர்­க­ருத்து தெரி­விக்­கையில் கொவிட் 19 மரணங்கள் அடக்­கத்­துக்­காக அனைத்து மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் ஓட்­ட­மா­வ­டிக்கே எடுத்துச் செல்­லப்­ப­டு­கின்­றன. இதனால் மனித வளம், அரசின் நிதி விர­ய­மாக்­கப்­ப­டு­கி­றது. வச­தி­ வாய்ப்­பற்­ற­வர்கள் பெரிதும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

அம்­பாறை, திரு­மலை, கண்டி, குரு­ணாகல், மன்னார் போன்ற மாவட்டங்­களில் கொவிட் 19 ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்கு காணிகள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன. சில காணிகள் ஏற்­க­னவே நீர் வழங்கல் சபை­யினால் அடக்கம் செய்­வ­தற்கு உகந்த இடங்­க­ளாக சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளன.

ஓட்­ட­மா­வ­டியில் முஸ்லிம் ஜனா­ஸாக்கள் மாத்­தி­ர­மல்ல சிங்­கள, தமிழ், கிறிஸ்­தவ மற்றும் வெளி­நாட்­ட­வர்­களின் சட­லங்­களும் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. 

தூர இடங்­க­ளி­லி­ருந்து சடலங்கள் கொண்டுவரப்படுகின்றன. வீண் விரயங்களையும், அசெளகரியங்களையும் தவிர்ப்பதற்காக மாவட்ட ரீதியில் கொவிட் 19 மையவாடிகள் நிறுவப்பட வேண்டும் என்றார்.

Vidivelli

No comments:

Post a Comment