இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு - கைதான மெய்ப் பாதுகாவலருக்கு விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, July 12, 2021

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு - கைதான மெய்ப் பாதுகாவலருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்ப் பாதுகாவலரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எ.சி.எம். றிஸ்வான் இன்று திங்கட்கிழமை (12) உத்தரவிட்டார்.

கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்ப் பாதுகாவர் பொதுமகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மெய்ப் பாதுகாவலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் வழக்கு விசரணைக்கு எடுக்கப்பட்டது இதன்போது குறித்த நபரை கொரோனா காரணமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரமுடியாத நிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.

இதன்போது சந்தேகநபரான மெய்ப் பாதுகாவலரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment