பிரான்ஸ் ஜனாதிபதியை கன்னத்தில் அறைந்த நபர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 8, 2021

பிரான்ஸ் ஜனாதிபதியை கன்னத்தில் அறைந்த நபர்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நடந்து செல்லும்போது, திடீரென அவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெற்கு பிரான்சில் உள்ள ஒரு இடத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் மேக்ரான் கன்னத்தில் அறைந்துள்ளார்.

பச்சை நிற உடை அணிந்த நபர் ஒருவர், ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அறைகிறார்.

இதை பாதுகாப்பு வீரர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக அவர்கள் சுதாரித்துக் கொண்டு அந்த நபரை கீழே தள்ளினர். மேக்ரானை தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த நபர் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கன்னத்தில் அறையும் போது, “மேக்ரான் ஒழிக” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு அவமரியாதை என்று பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறினார்.

மேக்ரான் தென்-கிழக்கு பிரான்சின் டிரோம் பகுதியில் கொரோனாவிற்கு பின் வாழ்க்கை எப்படி திரும்பிக் கொண்டிருக்கிறது என்பது குறித்து மாணவர்கள், உணவகங்கள் நடத்துபவர்களை சந்தித்து கேட்டு அறிந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது இச்சம்பவம் நடந்துள்ளது.

No comments:

Post a Comment