வேனில் போதைப் பொருளை கடத்தியமை தொடர்பில் பெண்ணொருவர் உட்பட ஐந்து பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, June 6, 2021

வேனில் போதைப் பொருளை கடத்தியமை தொடர்பில் பெண்ணொருவர் உட்பட ஐந்து பேர் கைது

(செ.தேன்மொழி)

சியம்பலாண்டுவ பகுதியில் வேனில் ஹெரோயின் போதைப் பொருளை கடத்தியமை தொடர்பில் பெண்ணொருவர் உட்பட ஐந்து பேர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது பொத்துவில் பகுதியைச் சேர்ந்த நபர்களே வேனில் பயணித்துள்ளதுடன், குறித்த வேனிலிருந்து 151 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் வேனின் சாரதி மற்றும் அதில் பயணித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நபர்களுள் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment