விமானங்களை கடத்தி பாகிஸ்தானுக்கு கொண்டு செல்வதாக அச்சுறுத்திய நபர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 9, 2021

விமானங்களை கடத்தி பாகிஸ்தானுக்கு கொண்டு செல்வதாக அச்சுறுத்திய நபர் கைது

மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூர் விமான நிலையங்களில் இருந்து விமானங்களை கடத்தி பாகிஸ்தானுக்கு கொண்டு செல்வதாக அச்சுறுத்திய 34 வயதுடைய நபரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலைய அதிகாரிகளுக்கு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்தது.

அந்த அழைப்பில் அழைப்பாளர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததாக போபாலின் காந்தி நகர் காவல் நிலைய பொறுப்பாளர் அருண் சர்மா பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் விமான நிலைய நிர்வாகம் காந்தி நகர் பொலிஸாரிடம் இது குறித்து முறைப்பாடு அளித்தது.

அதையடுத்து விமானங்களை கடத்திச் செல்வதாக அச்சுறுத்தியதாகக் கூறப்படும் அந்த நபர், போபாலில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள சுஜல்பூர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைதான நபரிடம் இது தொடர்பான பூரண விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அருண் சர்மா பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் உறுதிபடுத்தியுள்ளார்.

இதேவேளை அச்சுறுத்தல் அழைப்பைத் தொடர்ந்து போபால் விமான நிலையத்தில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளதாக மேலும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment