இலங்கை ஒரே நேரத்தில் இரு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது, உதவ அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் - ஐ.நா. சபையின் வதிவிடப்பிரதிநிதி - News View

About Us

About Us

Breaking

Saturday, June 5, 2021

இலங்கை ஒரே நேரத்தில் இரு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது, உதவ அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் - ஐ.நா. சபையின் வதிவிடப்பிரதிநிதி

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் கடற்சூழல் மாசடைவு ஆகிய இரு சவால்களையும் இலங்கை ஒரேவேளையில் எதிர்கொண்டுள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு அனைத்துத் தரப்பினரும் உதவ முன்வர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று இலங்கையின் நிலைகுறித்து ஹனா சிங்கர் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, இலங்கை தற்போது கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மற்றும் கடற்பரப்பில் ஏற்பட்ட அனர்த்தம் ஆகிய இரு சவால்களையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னடைவிலிருந்து இலங்கையர்கள் மீட்சிபெற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

அதேவேளை இந்த அனர்த்தத்தின் விளைவாகக் கடற் பிராந்தியத்திற்கும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புக்களை மதிப்பீடு செய்வதற்கும் அவற்றை சீர் செய்வதற்கு அவசியமான உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் அனைத்துத் தரப்பினரும் விரைந்து முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment