விசாரணை நிறைவடையும் வரை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் கடற்படைக்கு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Monday, June 7, 2021

விசாரணை நிறைவடையும் வரை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் கடற்படைக்கு உத்தரவு

க்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளது.

கப்பல் கடலில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கப்பலின் வீடியோ தரவு பதிவகத்தையும் விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களம் பெற்றுள்ளது. இந்த விசாரணை நிறைவடையும் வரை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த கப்பல் தீ விபத்துக்கு உள்ளாகி கடலுக்குள் மூழ்கியதால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதற்கான இழப்பீடு களை பெற்றுக் கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நீதி அமைச்சில் இடம்பெற்றது.

No comments:

Post a Comment