இலங்கையில் இதுவரை கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்டோரின் விபரம் வெளியானது! - News View

About Us

About Us

Breaking

Thursday, June 10, 2021

இலங்கையில் இதுவரை கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்டோரின் விபரம் வெளியானது!

இலங்கையில் இதுவரை 21 இலட்சத்து 56 ஆயிரத்து 935 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 67 ஆயிரத்து 615 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை 11 இலட்சத்து 66 ஆயிரத்து 707 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 25 ஆயிரத்து 451 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 342 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 3 இலட்சத்து 54 ஆயிரத்து 993 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 64 ஆயிரத்து 986 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2 ஆயிரத்து 865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2 ஆயிரத்து 435 பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment