கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாஸ ஆகியோர் விரைவில் வீடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் சஜித் பிரேமதாஸ மற்றும் ஜலனி பிரேமதாஸ கொழும்பிலுள்ள தனியார் வைத்திசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அவர்கள் உடல் நிலையில் எவ்வித பிரச்சினையும் இல்லையென மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் அடுத்த வாரமளவில் அவர்கள் இருவரும் வீடு திரும்புவார்களென அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment