நான் பாராளுமன்றம் செல்லும் காலம் வந்துவிட்டது ரதன தேரர் பதவி விலக வேண்டும் என்கிறார் ஞானசார தேரர் : பதவி விலகேன், எவருடனும் உடன்படிக்கை செய்யவில்லை என்கிறார் ரதன தேரர் - News View

About Us

About Us

Breaking

Friday, June 11, 2021

நான் பாராளுமன்றம் செல்லும் காலம் வந்துவிட்டது ரதன தேரர் பதவி விலக வேண்டும் என்கிறார் ஞானசார தேரர் : பதவி விலகேன், எவருடனும் உடன்படிக்கை செய்யவில்லை என்கிறார் ரதன தேரர்

பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை அபே ஜன­பல கட்சி தனது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிக்க தீர்மானித்துள்­ள­தாக கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்­து­ர­லியே ரதன தேரர் தேசியப்பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்பினர் பத­வியில் ஆறு­ மாத காலத்தை ஜூலை மாதம் 5ஆம் திகதி நிறைவு செய்­கிறார். அத­னை­ய­டுத்து அவர் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­ததும் ஞான­சார தேரர் தேசியப்பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்பினராக நிய­மனம் பெறுவார் என பொது­பல சேனா அமைப்பின் ஊடக இணைப்­பாளர் எரந்த கேந­வ­ரத்ன தெரி­வித்தார்.

அபே ஜன­பல கட்­சியின் பொதுச் செய­லாளர் வெடி­னி­கம விம­ல­ர­தன தேரர் அது­ர­லியே ரதன தேரரை கட்­சியின் தேசியப்பட்­டியல் பாராளுமன்ற உறுப்­பி­ன­ராக நிய­மித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. அப்போது மூன்று மாத காலத்­துக்கு பத­வியில் இருக்­கு­மாறு வேண்டப்­பட்­டி­ருந்தார். 

2021 ஜன­வரி 5ஆம் திகதி அவர் நிய­மிக்­கப்­பட்டார். மூன்று மாதங்களின் பின்பு தேசியப்பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவியை அது­ர­லியே ரதன தேரர் ஞான­சார தேர­ருக்கு வழங்குவதற்கு திட்­ட­மிட்­டி­ருந்தார். உறு­தி­யு­ம­ளித்­தி­ருந்தார். 

என்றாலும் ரதன தேரர் 6 மாதங்கள் பத­வி­யி­லி­ருந்­தாலும் பிரச்சினையில்லை என ஞான­சார தேரர் தெரி­வித்­தி­ருந்தார். இதனை­ய­டுத்தே அது­ர­லியே ரதன தேரர் தொடர்ந்தும் பதவியிருக்கிறார்.

கடந்த பொதுத் தேர்­தலில் அபே ஜன­பல கட்­சி மொத்தம் 67,758 வாக்குகளைப் பெற்­றி­ருந்தது. அத்­து­ர­லியே ரதன தேரர் பொதுத் தேர்தலில் அக்­கட்­சியில் கம்­பஹா மாவட்­டத்தில் போட்­டி­யிட்டார்.

அவர் கடந்த பாரா­ளு­மன்­றத்தில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தேசியப்பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பதவி வகித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அபே ஜன­பல கட்­சியின் தேசியப்பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அது­ர­லியே ரதன தேரர் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­ததும் அவ் வெற்­றி­டத்­துக்கு பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார் என்­பதை கட்­சியின் செயலாளர் வெடி­னி­கம விம­ல­ர­தன தேரர் உறுதி செய்தார்.

தான் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்தும் விலகிக் கொள்வதற்குத் தயா­ராக இல்லை என அபே ஜன­பல கட்­சியின் தேசியப்பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அது­ர­லியே ரதன தேரர் தெரி­வித்­துள்ளார்.

சிங்­கள ஊட­க­மொன்­றுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார். 

அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில், ‘நான் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வுள்­ள­தாக வெளிவந்துள்ள செய்தியில் எவ்வித உண்மையுமில்லை. அது பொய்யான செய்தியாகும். 

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் 6 மாத காலத்தில் விலகுவதாக நான் எவருடனும் உடன்படிக்கை செய்துகொள்ளவில்லை. தொடர்ந்தும் எனது முழுமையான பதவிக் காலத்தை வகிப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Vidivelli

No comments:

Post a Comment