சமநிலையில் முடிவடைந்த நியூஸிலாந்து - இங்கிலாந்துக்கிடையிலான முதல் ஆட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 7, 2021

சமநிலையில் முடிவடைந்த நியூஸிலாந்து - இங்கிலாந்துக்கிடையிலான முதல் ஆட்டம்

லொரட்ஸில் நடைபெற்ற சுற்றுலா நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

2 ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்காக டொமினிக் சிப்லி ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார்.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லொர்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 378 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியின் டெவென் கான்வே அதிகபட்சமாக 200 ஓட்டங்களை குவித்தார்.

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ரொபின்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸ் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 275 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து அணி வீரர் ரோய் பேர்ன்ஸ் அதிகபட்சமாக 132 ஓட்டங்களை எடுத்தார்.

நியூசிலாந்து தரப்பில் பந்து வீச்சில் டிம் சௌதி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் 103 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து 4 ஆவது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 62 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இந்நிலையில், போட்டியின் 5 ஆவதும் இறுதி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, 273 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

ரோய் பெர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிப்லி ஆகியோர் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இரு வீரர்களும் நிதினமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

ரோய் பேர்ன்ஸ் 81 பந்துகளில் 25 ஓட்டங்களை எடுத்த நிலையில் வக்னர் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த சக் க்ரவ்லி 2 ஓட்டத்துடன் வெளியேனார். பின்னர் களமிறங்கிய அணித் தலைவர் ஜோ ரூட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர் 40 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் வக்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த போப் உடன் ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் டொமினிக் சிப்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியாக இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

டொமினிக் சிப்லி 60 ஓட்டங்களுடனும், போப் 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இதன் மூலம் இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.

முதல் இன்னிங்சில் 200 ஓட்ங்களை குவித்த நியூசிலாந்து அணி வீரர் டெவென் கான்வே ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி பெர்மிங்கமில் உள்ள எட்ச்பேஸ்டோன் மைதானத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகும்.

No comments:

Post a Comment