நாட்டின் சில பகுதிகளில் நேற்றும் இறந்த நிலையில் 7 கடலாமைகள் கரையொதுங்கின.
நேற்று (23) காலை மொரட்டுவை - லுனாவ பகுதியில் ஒரு கடலாமை கரையொதுங்கியதுடன், பகல் வேளையில் முரவத்த பகுதியில் மற்றுமொரு கடலாமையின் உடல் கரையொதுங்கியது.
களுத்துறை வடக்கு பகுதியிலும் காலி - கொஸ்கொட, நாபே பகுதியிலும் கடலாமைகள் இறந்துள்ளன.
இதேவேளை, ஹிங்கடுவையில் நேற்று இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கின. நாரா நிறுவன அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கல்முனை - பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் நேற்று டொல்பின் கரையொதுங்கியுள்ளது.
முந்தல் - சின்னப்பாடு கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கடலாமை கரையொதுங்கியுள்ளது.
MV X-Press Pearl கப்பல் தீப்பற்றியதில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மாதம் முதல் கடல் வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
இதுவரையான காலப்பகுதில் சுமார் 88 கடலாமைகளும், ஒரு திமிங்கிலமும், 7 டொல்பின்களும் இறந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் கரையொதுங்கியுள்ளன.
No comments:
Post a Comment