தினமும் கபுறுகளை தோண்டி தயாராக இருக்க வேண்டிய கவலையான நிலைமை : ஓட்டமாவடியில் வியாழன் வரை 539 ஜனாஸாக்கள் அடக்கம் : இடப்பற்றாக்குறை ஏற்பட்டால் மேலும் 10 ஏக்கர் காணி சிபாரிசு என்கிறார் செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Friday, June 11, 2021

தினமும் கபுறுகளை தோண்டி தயாராக இருக்க வேண்டிய கவலையான நிலைமை : ஓட்டமாவடியில் வியாழன் வரை 539 ஜனாஸாக்கள் அடக்கம் : இடப்பற்றாக்குறை ஏற்பட்டால் மேலும் 10 ஏக்கர் காணி சிபாரிசு என்கிறார் செயலாளர்

கொவிட்19 தொற்று கார­ண­மாக முஸ்­லிம்­களின் இறப்பு வீதம் நாளாந்தம் அதி­க­ரித்து வரு­கி­றது. தினமும் கபு­று­களைத் தோண்டி ஜனா­ஸாக்­களை அடக்­கு­வ­தற்கு நாம் தயா­ராக இருக்க வேண்­டிய கவ­லை­யான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. 

கடந்த மே மாதம் 21 ஆம் திக­திக்குப் பின்­ன­ரான பய­ணத்­தடை அமுலில் இருக்கும் காலத்தில் இப்­போது வரை இந்­நி­லைமை அதிகரித்­துள்­ள­மையை ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டிக்கு எடுத்­து­வ­ரப்­படும் ஜனா­ஸாக்கள் உறுதி செய்­கின்­றன என ஓட்டமாவடி பிர­தேச சபையின் செய­லாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரி­வித்தார்.

ஓட்­ட­மா­வடி - மஜ்மா நகர் விஷேட மைய­வா­டியில் கொவிட்-19 தொற்றுக்­குள்­ளாகி மர­ணித்­த­வர்­களை அடக்கம் செய்யும் பணிகள் குறித்து அவரை தொடர்பு கொண்ட போது அவர் பின்­வ­ரு­மாறு தெரிவித்தார்.

‘இங்கு அடக்கம் செய்­வ­தற்­காக கொண்டு வரப்­படும் ஜனாஸாக்களில் தொடர்ந்து அதி­க­ரிப்­பினைக் காண­மு­டி­கி­றது. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மாத்­திரம் நாட்டின் பல பகு­தி­க­ளி­லி­ருந்து 23 ஜனா­ஸாக்கள் இங்கு அடக்கம் செய்­யப்­பட்­டன. வியாழக்கிழமை (10) மாலை வரை 539 ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­பட்­டன. தொடர்ந்தும் பல ஜனா­ஸாக்கள் எடுத்­து­வ­ரப்­ப­ட­வுள்­ளன.

முஸ்லிம் சமூ­கத்தில் கொவிட்-19 தொற்று கார­ண­மாக இறப்பு வீதம் அதி­க­ரித்து வரு­கின்­றமை கவ­லை­யான விட­ய­மாகும். எமது சமூகம் கொவிட்-19 தொடர்­பான சுகா­தார வழி­காட்­டல்­களை உரிய முறையில் பின்­பற்­றா­மையே இதற்குக் கார­ண­மாகும். 

இந்­நி­லைமை தொடர்ந்தால் முஸ்லிம் சமூ­கமே கொவிட்-19 தொற்றினைப் பரப்­பி­ய­தாக ஏனைய சமூ­கத்­தினர் குற்றம் சுமத்தலாம். எனவே நாம் மிகவும் அவ­தா­ன­மாக செயற்­பட வேண்டும்.

தினமும் கபு­று­களைத் தோண்டி நாம் தயா­ராக இருக்க வேண்­டிய கவ­லை­யான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. மஜ்மா நகர் விஷேட மையவா­டியில் இடப்­பற்­றாக்­குறை ஏற்­பட்டால் மாற்­றி­ட­மாக வாகனேரி பிர­தே­சத்தில் சாப்­ப­மடு என்ற கிரா­மத்தில் 10 ஏக்கர் அரச காணியை நாம் சிபா­ரிசு செய்­துள்ளோம். இக்­காணி தற்­போ­தைய மஜ்மா நகர் மைய­வா­டி­யி­லி­ருந்து 300 மீற்றர் தூரத்­துக்கு அப்­பாலே உள்­ளது.

இதே­வேளை ஓட்­ட­மா­வ­டியில் சில பிர­தே­சங்­க­ளிலும் கொவிட் தொற்றா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். 280 பேர் தொற்றுக்குள்ளா­கி­யுள்­ளனர். ஒரு மரணம் நிகழ்ந்­துள்­ளது. மாஞ்சோலை, மீரா­வோடை மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவை­யாளர் பிரி­வு­களை தனி­மைப்­ப­டுத்­து­வ­தற்­கான நடவடிக்கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் கொவிட் செய­லணி மற்றும் சுகா­தார பிரி­வி­னரின் ஆலோசனையையும் அனு­ம­தி­யையும் கோரி­யுள்ளோம்.

ஓட்­ட­மா­வடி சுகா­தார வைத்­திய அதி­கா­ரியின் தலை­மையில் நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

இக்கூட்டத்தில் இராணுவ பொறுப்பதிகாரி, பிரதேச செயலாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச சபை உயர் அதிகாரிகள், சுகாதார பிரிவு அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்றார்.

Vidivelli

No comments:

Post a Comment