மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 80 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 29, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 80 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (29.05.2021) 80 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சகாதார பிரதி பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்தார்.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தோரும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் வீதியில் அனாவசியமாக பயணம் செய்தோர், வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டோர், நடமாடும் வியாபாரம் செய்தோர் ஆகியோருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சீ.ஆர். பரிசோதனைகளின் பிரகாரம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேரும் களுவான்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில 07 பேரும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் செங்கலடி 03 பேரும் வவுனதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வவுணதீவு 01பேரும் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கிரான் 06 பேரும் வெள்ளாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேரும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேரும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேருமாக மொத்தம் 80 பேருமாக கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என்று மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment