மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 12 பேர் உட்பட இன்றையதினம் 30 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.
இன்றையதினம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் 60 உத்தியோகத்தர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதில் 12 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று மட்டக்களப்பில் 09 பேரும், காத்தான்குடியில் 04 பேரும், செங்கலடி பகுதியில் ஐந்து பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பேணுவதுடன் பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment