மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள், பிரிவெனாக்களுக்கு ஏப்ரல் 30 வரை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவல் நிலையை கருத்திற் கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.
இவ்வறிவிப்பைத் தொடர்ந்து, அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் குறித்த தினம் வரை விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, முஸ்லிம் பாடசாலைகளைத் தவிர்ந்த நாட்டின் அனைத்து பாடசாலைகளும் கடந்த வாரம் ஏப்ரல் 19ஆம் திகதி ஆரம்பித்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கொவிட்-19 பரவல் நிலை காரணமாக பாடசாலைகள் இவ்வாறு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment