பாகிஸ்தானின் பலூசிஸ்தான் அரசியல்வாதியான, எம்.என்.ஏ மௌலானா சலாவுதீன் அயூபியின் பதின்ம வயது சிறுமியுடனான திருமணம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விடயம் சிவில் சமூக உறுப்பினர்களால் எதிர்க்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரந்த அளவில் பேசப்பட்டு வருகிறது.
சித்ராலைச் சேர்ந்த சிவில் சமூக ஆர்வலர்கள் திருமணத்திற்கு ஆட்சேபனை தெரிவித்ததோடு, அந்தப் பெண்ணுக்கு 14 வயது என, பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர், பாகிஸ்தானின் பிற பகுதிகளில் உள்ள சிவில் சமூக அமைப்புகளால் இந்த விவகாரம் விசாரணைக்கு கோரப்பட்டது. இந்த விவகாரம் தேசிய சட்டமன்றத்திலும் எழுப்பப்பட்டது.
புதிய விவரங்களின்படி, பெத்வாரில் அயூபியுடன் தனது திருமணம் நிகழ்த்தப்பட்ட நாளான பெப்ரவரி 15அன்று சிறுமியின் வயது 16 வயதை கூட அடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment