வஸீம் தாஜூதீனின் கொலையும், அனுர சேனநாயக்காவின் முடிவும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

வஸீம் தாஜூதீனின் கொலையும், அனுர சேனநாயக்காவின் முடிவும்

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­கா­ரத்தில் பேசப்­பட்ட ஒரு­வரே முன்னாள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேன­நா­யக்க.

வஸீம் தாஜுதீன் படு­கொ­லையை வாகன விபத்­தாக மாற்­றி­யதில் இவ­ரது பங்­க­ளிப்பு அளப்­ப­ரி­யது. 

இத­னா­லேயே, வஸீம் தாஜுதீன் விவ­கா­ரத்தில் சாட்­சி­யங்­களை மாற்­றி­யமை தொடர்பில் அனுர சேன­நா­யக்க கைது செய்­யப்­பட்டு, விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட பின்னர் சட்டமா அதி­பரால் தண்­டனை சட்டக் கோவையின் 198 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் அவ­ருக்கு எதி­ராக மேல் நீதி­மன்றில் வழக்கும் தொட­ரப்­பட்­டது.

எது எவ்­வா­றா­யினும், கடந்த 9 வரு­டங்­க­ளாக நீதிக்­காக வஸீமின் குடும்­பத்தார் ஏங்கும் நிலையில், வஸீமின் கொலை­யுடன் தொடர்புபட்­ட­தாக அல்­லது அக்­கொ­லையை மறைக்க முயன்­ற­தாக நம்­பப்­படும் இரண்­டா­வது நபரின் முடிவும் நம் கண் முன்னே நிகழ்ந்துள்­ளது.

ஆம், கடந்த பெப்­ர­வரி 26 ஆம் திகதி, கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேன­நா­யக்க உயி­ரி­ழந்தார். 

கடந்த ஒரு வரு­டத்­துக்கும் மேலாக வாய்ப் புற்று நோயினால் பாதிக்கப்­பட்­டி­ருந்த அவர், கதைக்கக்கூட முடி­யாத அள­வுக்கு பாதிக்­கப்­பட்டு, ஈற்றில் கடந்த வாரம் உயிர் துறந்தார்.

இதற்கு முன்னர், வஸீம் தாஜுதீன் படு­கொ­லையை விபத்­தாக மாற்ற உத­விய, முன்னாள் கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­க­ரவும் இதேபோல் கடு­மை­யாக நோய் வாய்ப்­பட்டு உயி­ரி­ழந்­தி­ருந்தார்.

அனுர சேன­நா­யக்­கவின் மர­ணத்தை தொடர்ந்து, வஸீம் தாஜுதீன் மர­ணத்தை விபத்­தாக மாற்ற அவர் எடுத்த முயற்­சிகள் கண் முன்னே வந்து செல்­கின்­றன.

கடந்த 2012 மே 17 ஆம் திகதி வஸீம் தாஜு­தீனின் சடலம் அவ­ரது காருக்குள் இருந்து மீட்­கப்­பட்­டது.

2015 ஆம் ஆண்டின் பின்னர், நார­ஹேன்­பிட்டி பொலி­ஸா­ரிடம் இருந்து வஸீம் தாஜு­தீனின் படுகொலை குறித்த விசா­ர­ணைகள் சி.ஐ.டி.யிடம் கைய­ளிக்­கப்­பட்ட பின்னர், கொலை விபத்­தாக மாற்றப்­பட்­டதன் பின்­னணி கண்­ட­றி­யப்­பட்­டி­ருந்­தது.

குறிப்­பாக வஸீமின் சடலம் மீட்­கப்­பட்ட நார­ஹேன்­பிட்டி, சாலிகா மைதா­னத்தை அண்­மித்­துள்ள தொடர்­மாடி குடி­யி­ருப்­பொன்றில் வசிக்கும் நபர் ஒருவர், சி.ஐ.டி.க்கு அளித்­தி­ருந்த வாக்கு மூலத்தில் ‘அன்­றையதினம் அதி­காலை 2.30 மணிக்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பாட்டுப்படிக்கும் டி.ஐ.ஜி. அரைக்காற் சட்டையுடன் ஸ்தலத்­துக்கு வந்­த­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

அனுர சேன­நா­யக்க சிங்­கள பாடல்கள் பல­வற்றை பாடி­யுள்­ளவர் என்ற ரீதியில் அவரை பர­வ­லாக ‘பாடும் டி.ஐ.ஜி’ என அழைப்பதுண்டு.

சி.ஐ.டி. முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில், வஸீமின் கொலை இடம்பெற்ற தினம் ஸ்தலத்­தி­லி­ருந்து நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்­துக்கு அந்த அதி­காலை வேளை­யி­லேயே அரைக்காற்சட்டை­யுடன் சென்று அனுர சேன­நா­யக்க, பொறுப்பதிகாரி உள்­ளிட்­டோரை அழைத்து முன்­னெ­டுத்த வழமைக்கு மாற்­ற­மான நட­வ­டிக்­கைகள், பொலிஸார் பலரின் குறிப்புப் புத்­த­கங்­களில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் அவற்றையும் சி.ஐ.டி. சாட்­சி­ய­மாக எடுத்­தி­ருந்­தது.

சாதா­ரண வாகன விபத்­தாக இருப்பின் அதுவும் அந்த அதி­காலை வேளையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் அவ்­வாறு ஸ்தலத்­துக்கு செல்­வது நடை­மு­றைக்கு மாற்­ற­மாகும். அத்­துடன் அவ்வாறு அவர் நடந்து கொண்­டமை அவர் மீதான சந்­தே­கத்தை அதிக­ரிக்கும் செயற்­பா­டாக இருந்­தது.

இத­னை­விட, மறுநாள், வஸீமின் குடும்­பத்­தாரை பொலிஸ் தலைமைய­கத்தில் உள்ள மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலு­வ­ல­கத்­துக்கு அழைத்து, அனுர சேன­நா­யக்க கொடுத்த அழுத்­தமும், அச்­சு­றுத்­தலும் கூட வஸீம் படு­கொ­லையில் அனுர சேன­நா­யக்க ஒரு பங்­கு­தாரர் என்­பதை சொல்­லாமல் சொல்வதாக இருந்­தது.

வஸீமின் கொலை இடம்­பெற்ற தினத்தில் அதி­காலை வேளையில் அனுர சேன­நா­யக்­க­வுக்கும் ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கும் இடையிலான தொலை­பேசி தொடர்­பு­களும் வஸீமின் கொலையில் அனுர சேன­நா­யக்­கவின் பங்­க­ளிப்பு தொடர்பில் சந்­தேகம் கொள்ள மற்­று­மொரு கார­ண­மாகும். இந்நிலை­யி­லேயே வஸீம் தாஜுதீன் விவ­கா­ரத்தில் அனுர சேன­நா­யக்க மிக முக்­கிய சந்­தேக நப­ரானார்.

அனுர சேன­நா­யக்க 1973 ஆம் ஆண்டு உப பொலிஸ் பரி­சோ­த­க­ராக பொலிஸ் சேவையில் இணைந்­தி­ருந்­த­துடன், 2011 ஆம் ஆண்டு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதி­ப­ராக தர­மு­யர்வு பெற்­றி­ருந்தார். 

2015 ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். அவர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதி­ப­ராக மேல் மாகா­ணத்தில் கட­மை­யாற்­றிய 2011 முதல் 2015 வரை­யி­லான காலப்­ப­கு­தியில், பொலிஸ்மா அதி­பரை விட அதி­காரம் மிக்­க­வ­ரா­கவே செயற்­பட்­டி­ருந்தார். அதற்கு பல சம்பவங்கள் சான்று பகரும்.

அப்­போது ஆட்­சியில் இருந்த அர­சாங்­கத்­துக்கு தேவை­யான அனைத்தையும் அனுர சேன­நா­யக்க செய்து கொடுத்­தி­ருந்தார். 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தின் பின்னர்கூட அனுர சேன­நா­யக்க, ஓய்வு பெற்­றி­ருந்­தாலும் 2015 இற்கு முன்னர் இருந்த அரசியல்வாதிகளை மீள ஆட்­சிக்கு கொண்­டு­வ­ரவும், அவர்­க­ளுக்கு எதி­ரான குற்ற விசா­ர­ணை­களில் எதி­ரான சாட்­சி­யங்­களை முன்வைக்­காமல் இருக்கும் வகை­யிலும் பார்த்­துக்­ கொண்டார்.

எனினும், 2020, அவர் எதிர்­பார்த்த ஆட்சி அமைந்­தாலும், அவரால் எதுவும் செய்ய முடி­ய­வில்லை. அவர் காப்­பாற்­றிய அர­சி­யல்­வா­திகள், ஆட்­சி­யா­ளர்கள் ஆட்­சிக்கு வந்­தாலும் கூட, அதனால் அனுர சேனநாயக்­க­வுக்கு எந்த பிர­யோ­ச­னமும் கிடைக்­க­வில்லை. 

அவர்­களால் அனுர சேன­நா­யக்­கவை காப்­பாற்­றவும் முடி­ய­வில்லை. புற்று நோயால் வைத்­தி­ய­சாலை கட்­டில்­க­ளி­லேயே அனுர சேனநாயக்­கவின் காலம் கழிந்­தது. ஒரு பொலிஸ் அதி­கா­ரியால் சம்பா­திக்க முடி­யு­மான அள­வுக்கும் அதி­க­மாக சொத்து சேர்த்­தி­ருந்த அனுர சேன­நா­யக்­கவின் சொத்துக்களும் வைத்திய செலவிலேயே அழிந்தன. ஈற்றில் தனது 68 வயதில் அனுர சேனநாயக்க இந்த உலகுக்கு விடைக் கொடுக்க நேரிட்டது.

வஸீம் தாஜுதீன் விவ­க­ரத்தில் அனுர சேன­நா­யக்க பெரிதும் பேசப்பட்­டதால், அந்த படு­கொ­லையின் சூத்­தி­ர­தா­ரிகள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வில்லை என்­ப­தையும் சொல்­லி­யாக வேண்டும். எனினும், சட்­டத்தின் பிடி­யி­லி­ருந்து குற்­ற­வா­ளிகள் தப்பித்­தாலும் இறை­வனின் பிடி­யி­லி­ருந்து அவர்கள் தப்ப முடி­யாது. இறை­வனின் பிடி மிகக் கடுமையானதாக இருக்கும்.

Vidivelli
எம்.எப்.எம்.பஸீர்

No comments:

Post a Comment