உலகளவில் மூன்று பெண்களில் ஒருவர் பாலியல் அல்லது உடல் ரீதியான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர் - உலக சுகாதார அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

உலகளவில் மூன்று பெண்களில் ஒருவர் பாலியல் அல்லது உடல் ரீதியான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர் - உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிய அறிக்கையின்படி, உலகளாவிய ரீதியில் மூன்று பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் பாலியல் அல்லது உடல் ரீதியான வன்முறைகளுக்கு ஆளாவதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வன்முறையைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகளை மேம்படுத்தவும், பெண்கள் மற்றும் சிறுமிகளை அடிக்கடி தவறான உறவுகளில் சிக்க வைக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்கவும் சர்வதேச அரசாங்கங்களை வலியுறுத்தி ஐ.நா. நிறுவனம் செவ்வாய்க்கிழமை இந்த ஆய்வை வெளியிட்டது.

15-49 வயதுடைய பெண்களில் சுமார் 31 சதவீதம் பேர், அல்லது 852 மில்லியன் பெண்கள் வரை உடல் அல்லது பாலியல் வன்முறைகளை அனுபவித்திருக்கிறார்கள். உலக சுகாதார அமைப்பு 2000-2018 முதல் தேசிய தரவு மற்றும் கணக்கெடுப்புகளை உள்ளடக்கிய இதுபோன்ற மிகப்பெரிய ஆய்வு என்று கூறியது.

உறவுகளில் பரஸ்பர மரியாதை மற்றும் பாலுறவில் பரஸ்பர ஒப்புதல் தேவை குறித்து சிறுவர்களுக்கு பாடசாலைகளில் கற்பிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

"பெண்களுக்கு எதிரான வன்முறை ஒவ்வொரு நாட்டிலும் கலாசாரத்திலும் பரவக்கூடியது, இது மில்லியன் கணக்கான பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தீங்கு விளைவிக்கிறது, மேலும் இது கோவிட்-19 தொற்றுநோயால் அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.

கிரிபாஸ், பிஜி, பப்புவா நியூ கினியா, பங்களாதேஷ், கொங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை இவ்வாறான வன்முறையை எதிர்கொள்ளும் முன்னணி நாடுகள் ஆகும்.

இவற்றுள் மிகக் குறைந்த விகிதங்கள் ஐரோப்பாவில் பதிவாகியுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment