‘பெட்டிகளே எரிக்கப்பட்டன’ : நஸீர் அஹமட்டின் கருத்தினால் சர்ச்சை - ரவூப் ஹக்கீம் கண்டனம், தேரர் முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Friday, March 19, 2021

‘பெட்டிகளே எரிக்கப்பட்டன’ : நஸீர் அஹமட்டின் கருத்தினால் சர்ச்சை - ரவூப் ஹக்கீம் கண்டனம், தேரர் முறைப்பாடு

‘‘கொவிட்19 தொற்­றினால் உயி­ரி­ழந்த 181 ஜனா­ஸாக்­களின் பெட்­டிகள் மாத்­தி­ரமே எரிக்­கப்­பட்­டன என்­பதை மாத்­தி­ரமே இப்­போ­தைக்கு என்னால் கூற முடியும். இதற்குள் வெளியில் சொல்ல முடி­யாத நிறைய மறை­மு­க­மான விட­யங்கள் உள்­ளன’’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட  பாரா­ளு­மன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரி­வித்த கருத்து பெரும் சர்ச்­சையை ஏற்ப­டுத்­தி­யுள்­ளது.

இக்கருத்தை தான் வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தாக கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார். 

பல்­வேறு போராட்­டங்­களின் பின்னர் சர்­வ­தே­சத்தின் தலையீட்டினாலேயே இலங்­கையில் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கான உரிமை கிடைக்கப் பெற்­றுள்­ளது. தனது முயற்சியாலேயே இந்த அனு­மதி கிடைத்­த­தாக நஸீர் அஹமட் கூறுவது வெட்­கத்­துக்­கு­ரி­ய­தாகும். 

ஜெனீ­வாவில் இந்தப் பிரே­ரணை வந்­தி­ருக்­கா­விடின் ஒரு­போதும் எமது உரி­மைகள் கிடைத்­தி­ராது. அதனால் எனது கட்­சியின் உறுப்பினர்­களின் இவ்­வா­றான கருத்­துக்­களை நான் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறேன் என கண்­டியில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் கருத்து வெளி­யி­டு­கையில் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

இத­னி­டையே நஸீர் அஹமட் எம்.பி.யின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்­து­மாறு கோரி ஜம்­பு­ரே­வல சந்­தி­ர­ரத்ன தேரர் சட்டமா அதிபர் திணைக்­க­ளத்தில் நேற்று முன்­தினம் மகஜர் ஒன்றைக் கைய­ளித்­துள்ளார். 

கொவிட்­டினால் உயி­ரி­ழப்­ப­வர்­களின் விட­யத்தில் அர­சி­யல்­வா­திகள் தலை­யீ­டு­வது செய்­வது தவ­றான செயற்­பாடு என்றும் நஸீர் அஹமட் தெரி­வித்த மேற்­படி விடயம் தொடர்பில் விசா­ரணை நடாத்­து­மாறு சட்­டமா அதிபர் பொலிஸ்மா அதி­ப­ருக்கு உத்­த­ர­விட வேண்டும் என்றும் அந்த மக­ஜரில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானாவும் நஸீர் அஹமட்டின் கருத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

Vidivelli

No comments:

Post a Comment