(செ.தேன்மொழி)
களுத்துறை சிறைச்சாலையில் மதிலுக்கு மேல் இனந்தெரியாத நபர்களால் வீசப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களடங்கிய பொதியொன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த பொதியில் 3 தொலைபேசிகள், 45 கிராம் கஞ்சா போதைப் பொருள், 4 புகையிலைகள், புகைப்பிடித்தலுக்காக பயன்படுத்தப்படும் 5 லைட்டர்கள், 5 கிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் 5 கடதாசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதிகளில் யாருக்காவது வழங்கும் நோக்கத்திலேயே இந்த பொதி வீசப்பட்டிருக்கும் என்று சந்தேகிக்கும் சிறைச்சாலை அதிகாரிகள் அது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment