கடந்த 24 மணி நேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 36 விமான சேவைகள் முன்னெடுப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 17, 2021

கடந்த 24 மணி நேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 36 விமான சேவைகள் முன்னெடுப்பு

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேர பகுதியில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 36 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மூலமாக மொத்தம் 1,409 பயணிகள் தமக்கான சேவைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இக்கால கட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய 18 விமானங்களின் மூலமாக 762 பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்த இவர்கள் அனைவரும் இலங்கை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேவேளை இக்கால கட்டத்தில் 18 விமானங்களின் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 647 பயணிகள் நாட்டை விட்டு புறப்பட்டும் உள்ளனர்.

No comments:

Post a Comment