சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு கொரோனா - நீதிமன்றத்திற்கு அறிவித்த சிஐடியினர் - News View

About Us

About Us

Breaking

Friday, January 8, 2021

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு கொரோனா - நீதிமன்றத்திற்கு அறிவித்த சிஐடியினர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளிற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்செய்யாத சிஐடியினர் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரண்டு மணிக்கு சட்டத்தரணி ஹிஸ்புல்லாவை ஆஜர் செய்வதாக சிஐடியினர் அவரது மனைவிக்கும் நீதிமன்றத்திற்கும் சட்டத்தரணிகளுக்கும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் 3 மணியளவில் ஹிஸ்புல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய முடியாத நிலை காணப்படுவதாக நீதிமன்ற பணியாளர்கள் அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

சட்டத்தரணி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சிஐடியினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஹிஜாஸ் ஹில்புல்லா கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட நபருடன் தொலைபேசியில் உரையாடினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment