பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா : களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தை மூட நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, December 5, 2020

பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா : களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தை மூட நடவடிக்கை

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தங்கிருந்து காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த போதே இவருக்கான தொற்று நேற்று (5) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த பொலிஸ் நிலையத்தில் கொரோனாவுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, கிழக்கில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 332ஆக அதிகரித்துள்ளதாக மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இன்று மட்டும் 13 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர், இதில் அக்கரைப்பற்று 11, அட்டாளச்சேனை 01, களுவாஞ்சிக்குடி ஒன்று என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment