தூய நோக்கங்களுடன் கலந்த நேர்மையான தியாகங்களைச் செய்வதன் மூலம் எம்மால் செய்ய முடியாதது எதுவும் இல்லை - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 31, 2020

தூய நோக்கங்களுடன் கலந்த நேர்மையான தியாகங்களைச் செய்வதன் மூலம் எம்மால் செய்ய முடியாதது எதுவும் இல்லை - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்

புத்தாண்டு பிறப்பானது எமது வாழ்க்கையில் முகம் கொடுக்க நேர்ந்த வெற்றி தோல்விகளைப் பற்றியும், நிறை குறைகளைப் பற்றியும் மீண்டும் மீட்டிப் பார்ப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமாகும். தூய நோக்கங்களுடன் கலந்த நேர்மையான தியாகங்களைச் செய்வதன் மூலம் எம்மால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்பதை உலகரியச் செய்த தேசமாக எமது கடமைகளைத் தொடர்ந்தும் நிறைவேற்றுவது எமது பொறுப்பாகும் என ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சிங்களம், தமிழ், முஸ்லிம், மலே, பேகர் ஆகிய அனைத்து மக்களுக்கும் உரித்தான இலங்கையர் என்ற ரீதியில், தங்களுக்கு உரித்தான அடையாளங்களைப் பாதுகாத்துக் கொண்டு வாழ்வதற்காக எம்மால் நிர்மாணிக்கப்பட்ட பின்னணிகளை நாம் தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

இந்தியச் சமுத்திரத்தின் முத்தாக ஜோலிக்கும் வளமான தேசமாக எமது நாட்டை உருவாக்க அனைவரும் நல்லொழுக்கமுள்ள மக்களாக நாம் முன்னோக்கிச் செல்வோம்.

தற்பொழுது முழு உலகையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் கொடிய வைரஸ் தாக்கத்திற்கு முற்றுப்புள்ளியை வைக்கும் ஒரு வருடமாக இந்த வருடம் அமைய வேண்டும் என்ற உயரிய பிரார்த்தனைகளோடு, மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் மற்றும் தடைகளைப் பேணி, வீடுகளிலிருந்தவாறு, எளிமையாகவும் குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறும் உங்களனைவரையும் தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன்.

மலர்ந்துள்ள இந்த புத்தாண்டு இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்ததாக அமைய வேண்டும் எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகள்.

No comments:

Post a Comment