கிழக்கில் கொரோனா தொற்று 326 ஆக அதிகரிப்பு - தற்போது சிகிச்சையில் 372 பேர் - இதுவரை 13423 பேருக்கு பிசிஆர் பரிசோதனை - News View

About Us

About Us

Breaking

Saturday, December 5, 2020

கிழக்கில் கொரோனா தொற்று 326 ஆக அதிகரிப்பு - தற்போது சிகிச்சையில் 372 பேர் - இதுவரை 13423 பேருக்கு பிசிஆர் பரிசோதனை

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. கிழக்கில் இதுவரை 326 பேர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை கல்முனைப் பிராந்தியத்தில் 191 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அந்தப் பிராந்தியத்தில் புதிதாக உருவான அக்கரைப்பற்றுக் கொத்தணி மூலமாக இதுவரை 164 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

கல்முனைப் பிராந்தியத்தில் புதிதாக அட்டாளைச்சேனையில் திடீர் அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 17 பேர் தொற்றிலுள்ளனர்.

இவர்களில் மினுவாங்கொட கொத்தணி மற்றும் ஏனைய இடங்கள் மூலமாக 23 பேரும் பேலியகொட கொத்தணி மூலமாக 303 பேரும் தொற்றுக்கிலக்காகியிருந்தனர்.

கல்முனைப் பிராந்தியத்தில் புதிதாக உருவெடுத்த அக்கரைப்பற்று கொத்தணி மூலம் என்ற 191 தொற்றாளிகளுடன் கல்முனைப் பிராந்தியம் முன்னணி வகிக்கிறது. முதலாவது அலையில் இருவர். இங்கு கடந்த மார்ச் மாதத்திலிருந்து 191 பேர் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.

இறுதியாக அக்கரைப்பற்றில் 12 பேரும் அட்டாளைச்சேனையில் 13 பேரும் கல்முனை வடக்கில் ஒருவரும் ஆலையடிவேம்பில் இருவரும் திருக்கோவிலில் ஒருவருமாக மொத்தம் 29 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரை கிழக்கில் பேலியகொட கொத்தணி மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 92 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 191 பேரும் திருமலை மாவட்டத்தில் 16 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 12 பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.

கிழக்கில் தற்போதைய நிலைவரப்படி கல்முனைப் பிராந்தியமே 191 தொற்றுக்களுடன் முன்னிலை வகிக்கிறது. அதிலும் புதிதாக உருவான அக்கரைப்பற்று கொத்தணி 164 அதிகூடுதலான தொற்றுக்களை கொண்டிருக்கிறது. கிழக்கிலே அதிகூடிய தொற்றுள்ள தனியொரு பிரதேசமாக அக்கரைப்பற்று மாறியுள்ளது.

அடுத்தாக வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரிவில் அதிகூடிய தொற்றுக்கள் 60 இனங்காணப்பட்டிருந்தன. அடுத்தபடியாக இறக்காமத்தில் 11 பேரும் ஏறாவூரில் 10 பேரும் இனங்காணப்பட்டிருந்தனர்.

கிழக்கிலுள்ள ஐந்து கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 372 கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றுவரை 1263 பேர் மேற்படி 5 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 884 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 07 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர். இன்னும் 91 கட்டில்கள் எஞ்சியுள்ளன.

காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 497 பேர் அனுமதிக்கப்பட்டு 377 பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 116 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நால்வர் இடமாற்றப்பட்டிருந்தனர்.

கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 108 பேரும் பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 67 பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 81 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதுவரை கிழக்கில் 13423 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

காரைதீவு குறூப் நிருபர்

No comments:

Post a Comment