காலி கல்வி வலய பாடசாலைகள் 14 ஆம் திகதி வரை பூட்டு - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 8, 2020

காலி கல்வி வலய பாடசாலைகள் 14 ஆம் திகதி வரை பூட்டு

காலி கல்வி வலயத்திலுள்ள 26 பாடசாலைகளுக்கும் வெள்ளிக்கிழமை (11) வரை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு, கடந்த திங்கட்கிழமை முதல் நாளை (09) வரையான 3 நாட்களுக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொடர்ந்தும் இவ்வாரம் முழுவதும் பாடசாலைகளை மூட தீர்மானித்துள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாபா அறிவித்துள்ளார்.

குறித்த பாடசாலைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை மீள திறக்கவுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் நிமல் திசாநாயக்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment