ISS அமைப்பினர்கள் எவரும் இலங்கைக்குள் நுழையவில்லை - UK சன் செய்தியை இராணுவத் தளபதி நிராகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 11, 2020

ISS அமைப்பினர்கள் எவரும் இலங்கைக்குள் நுழையவில்லை - UK சன் செய்தியை இராணுவத் தளபதி நிராகரிப்பு

ISS அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கைக்குள் நுழைந்துள்ளனர் என வெளியான தகவல்களை இலங்கை இராணுவம் நிராகரித்துள்ளது. பிரித்தானியாவின் சன் செய்தித்தாளில் வெளியான செய்தியை இராணுவத் தளபதி நிராகரித்துள்ளார்.

அவ்வாறான ISS உறுப்பினர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிரியா ஈராக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலங்களை ISS இழந்த பின்னர் மிகவும் ஆபத்தான ISS உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என சன் தெரிவித்துள்ளது.

ISS அமைப்பு தீவிரமாக செயற்படும் நாடுகளின் விபரங்களை வெளியிட்டுள்ள சன் இலங்கையும் அதிலொன்று என குறிப்பிட்டுள்ளது.

ISS அமைப்பு தனது சாம்பலில் இருந்து மீண்டும் எழுகின்றது, சர்வதேச அளவில் கொலைகள் மற்றும் குழப்ப நடவடிக்கைகளில் அந்த அமைப்பு ஈடுபடுகின்றது என சன் தெரிவித்துள்ளது.

மொசாம்பிக்கின் வடபகுதியில் ISS அமைப்பின் தாக்குதலில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதை அது சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment