யுவதியொருவர் பொலிஸ் ஆவதை தடுக்க வீட்டில் கசிப்பு வைத்தவர் கைது! - News View

About Us

About Us

Breaking

Friday, November 20, 2020

யுவதியொருவர் பொலிஸ் ஆவதை தடுக்க வீட்டில் கசிப்பு வைத்தவர் கைது!

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கான நேர்முகப் பரீட்சைக்கு தோற்றவிருந்த யுவதியை தடுக்கும் முகமாக குறித்த யுவதியின் வீட்டின் பின்புறத்தில் கசிப்பு, மதுபானம் நிரப்பப்பட்ட இரு கேன்களை மறைத்து வைத்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். 

மொனராகலைப் பகுதியின் கராண்டுகலை என்ற இடத்திலேயே இச்சம்பவம் இன்று 20-11-2020 இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, குறிப்பிட்ட யுவதி நேர்முகப் பரீட்சைக்கு தோற்றினால் தொழில் கிடைத்து விடும். அதனைத் தடுக்கு முகமாகவே கசிப்பு நிரப்பப்பட்ட இரு கேன்களை யுவதியின் வீட்டின் பின்புறம் மறைத்து வைத்தமையை குறித்த நபர் பொலிசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

குறிப்பிட்ட யுவதி பொலிஸ் கான்ஸ்டபிளாக தொழில் கிடைத்து விட்டால் நம்மால் வாழ முடியாமல் போய்விடுமென்ற அச்சத்தினாலே தான் மேற்படி செயற்பாட்டினை மேற்கொண்டேன். யுவதியின் வீட்டின் பின்புறம் கசிப்பு நிரப்பப்பட்ட இரு கேன்களை மறைத்து வைத்ததோடு யுவதியே கசிப்பு தயாரித்து விற்பனை செய்வதாக தகவலையும் பொலிசாருக்கு வழங்கினேனென்று கைது செய்யப்பட்ட நபர் பொலிசாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட நபரின் வீட்டை சுற்றி வலைத்த கராண்டுகலை பொலிசார் அங்கு மேற்கொண்ட சோதனையின் போது மேலும் கசிப்பு நிரப்பப்பட்ட மூன்று கேன்களை கண்டு பிடித்து மீட்டனர்.

பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து குறித்த யுவதியின் வீட்டின் பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு நிரப்பப்பட்ட இரு கேன்களை மீட்டதுடன் குறித்த யுவதியையும் கைது செய்தனர். 

ஆனால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது யுவதியின் அயல் வீட்டைச் சேர்ந்தவரும் பொலிசாருக்கு தகவல் வழங்கிய நபரை கைது செய்து விசாரணைக்குற்படுத்தப்பட்ட போது அந்த நபர் திட்டமிட்டு இச்செயலைப் புரிந்தமை தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட யுவதி குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார். 

இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர் யுவதிக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தியமை, கசிப்பு தயாரித்தமை, விற்பனை செய்தமை, ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இத்தகவலை கராண்டுகலை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment