அனுராதபுரம் நகரைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறித்த பகுதியில் உள்ள மேலும் 81 பிச்சைக்காரர்களை தனிமைப்படுத்த நேற்று பிற்பகல் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அனுராதபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.
மேலும், அனுராதாபுரம் நகரில் உள்ள 81 பிச்சைக்காரர்களை பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து தனிமைப்படுத்த அனுராதபுரம் நகராட்சி மன்றம் நடவடிக்கை எடுத்தது என்றும் அவர் கூறினார்.
கொரோனா தொற்று உறுதியான 80 வயதுடைய குறித்த பிச்சைக்காரர் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment