ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான வலம்புரி சங்குகளை விற்க முயன்ற நால்வர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான வலம்புரி சங்குகளை விற்க முயன்ற நால்வர் கைது

காலி, இமதுவ பிரதேசத்தில் 2 வலம்புரி சங்குகளை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியில் விற்பனை செய்ய முயற்சித்த 4 பேர், களுத்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றிரவு (30) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்கள் நுவரெலியா மற்றும் இமதுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் இமதுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment