பொதுமக்களுக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முக்கிய அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 11, 2020

பொதுமக்களுக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முக்கிய அறிவிப்பு

பொதுமக்களுக்கு தபால் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத் துறை வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளின்படி ஜனாதிபதி செயலகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்கள் கடமையில் ஈடுபடுவதன் காரணமாக, பொதுமக்கள் வருகை தருவதன் ஊடாக ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் தபால் ஊடாகவும் தொலைபேசி ஊடாகவும் மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் நோக்கில் இவ்வாறு பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அதன் படி ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு
தொலைபேசி- 0114354550 / 0112354550 
தொலைநகல்- 011 2348855, 

ஒம்புட்ஸ்மேன் அலுவலகம்
தொலைபேசி- 0112338073, 

ஜனாதிபதி நிதியம்
தொலைபேசி- 0112354354 (4800 / 4814 / 4815 / 4818)
தொலைநகல்- 011 2331243

No comments:

Post a Comment